Image Courtacy: AFP 
உலக செய்திகள்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த பாகிஸ்தான்

பொருளாதார தடைகளை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்.

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதையடுத்து ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா தன் நாட்டின் கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் ரஷியாவின் சலுகை விலை கச்சா எண்ணெய் அறிவிப்பால் எண்ணெயை இறக்குமதி செய்து பலன் அடைந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அண்டை நாடான பாகிஸ்தானில் நிதிநிலைமை மோசமானது. உலக வங்கி உள்பட பெரும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு மத்தியிலும் ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப்போவதாக அந்தநாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார். அதன்படி ரஷியாவின் முதல் தவணை எண்ணெய் பீப்பாய்கள் கராச்சி துறைமுகம் வந்ததுள்ளது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்கள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் கச்சா எண்ணெயை முதல் முறையாக பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து