உலக செய்திகள்

ரெயிலை நிறுத்திவிட்டு தயிர் வாங்க சென்ற டிரைவர்; வேலை இழந்த பரிதாபம்!

ரெயில் டிரைவர் திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இண்டர்சிட்டி ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில்  டிரைவர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அவர் கானா ரெயில் நிலையம் அருகே ரெயிலை நிறுத்திவிட்டு தயிர் வாங்க சென்றுள்ளார். பின், அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரெயிலை இயக்கி உள்ளார்.  

இந்த நிகழ்வை ரெயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த ரெயில் ஓட்டுநரை பற்றிய அந்த வீடியோ தான், சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்