கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றம்: தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளாகள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா. இதனால் அந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்க வரலாறு காணாத இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இது உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 4-ந் தேதி தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க போலீசுக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு