உலக செய்திகள்

உக்ரைனின் கெர்சன் நகரம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இல்லை; அமெரிக்கா

ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட முக்கிய நகரமான கெர்சன், இப்போது ரஷிய படைகளின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாத காலத்தை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனில் முதன்முறையாக ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட முக்கிய நகரமான கெர்சன், இப்போது ரஷிய படைகளின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளது என்று அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமுனையில், ரஷிய ராணுவ பொதுப்பணியாளர்களின் செயல்பாட்டு இயக்குநரக தலைவர் மேஜர் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், கெர்சன் பகுதி இன்னும் எங்கள் முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது" என்று கூறினார். ஒரு பெரிய உக்ரேனிய எரிபொருள் தளத்தை ரஷிய படைகள் அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேனியப் படைகள் இப்போது கெர்சனில் கடுமையாகப் போரிட்டு, அங்கு ரஷிய படைகளைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றன.கெர்சனில் உக்ரைன் பெறும் வெற்றி, ரஷியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும். மேலும், உக்ரைனுக்குச் செல்வதற்காக, ஜார்ஜியாவில் இருக்கும் தனது படைகளை ரஷியா பின்வாங்க தொடங்கியது என்று பென்டகன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்