உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ்.

மணிலா,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

15 பேர் பலி

இந்நிலையில், புயல், கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சரன்கனி மாகாணம் மிண்டனோ தீவின் மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர், லனோ டெல் சுர் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.