உலக செய்திகள்

தெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

தெற்கு பிலிப்பைன்சில் வீசிய சூறாவளியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

மணிலா,

பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் கடும் வெள்ளம் மற்றும் நில சரிவு ஆகியவை ஏற்பட்டு பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்நிலசரிவில் ஒரு கிராமம் சேதமடைந்தது.

இந்த சூறாவளி தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இதேபோன்று அருகிலுள்ள நகரங்களில் சூறாவளி பாதிப்பினால் 4 பேரும், லானாவ் டெல் சர் மாகாணத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்