உலக செய்திகள்

ஆஸ்திரியா நாட்டில் தீவிரவாதிகள் 6 இடங்களில் தாக்குதல் 2 பேர் பலி

ஆஸ்திரியா நாட்டில் தீவிரவாதிகள் 6 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 2 பேர் பலியானர்கள்

வியன்னா

ஆஸ்திரியாவின் மத்திய வியன்னா நகரில் பரபரப்பான பகுதியில் திடீர் என புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கண்மூடித்த்னமாக சுட்டனர் இதில் 2 பேர் பலியானார்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர், இதனை ஆஸ்திரியா ஒரு "மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல்" என்று வர்ணித்து உள்ளது.

இந்த தாக்குதலின் போது காயமடைந்த ஒரு பெண் இன்று அதிகாலையில் காயங்களுடன் இறந்துவிட்டதாக வியன்னா மேயர் மைக்கேல் லுட்விக் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதி என சந்தேகப்படும் நபர் ஒருவர் போலீஸ் படையினரால் கொல்லப்பட்டார்.

ஆறு வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் நகர மையத்திலிருந்து விலகி இருக்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்களைகேட்டு கொண்டு உள்ளனர். இன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

உள்துறை மந்திரி கார்ல் நெஹம்மர் இந்த சம்பவத்தை "ஒரு பயங்கரவாத தாக்குதல்" சிறப்பு படைகள் இப்போது பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றன. என்று கூறினார்.

இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்த தாக்குதல்களுக்கு "கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் ஆஸ்திரியாவிலிருந்து வந்த தகவல்கள் "திகிலூட்டும் மற்றும் குழப்பமானவை" என்று கூறி உள்ளன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை