உலக செய்திகள்

ரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு

ரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,

மாஸ்கோ,

சீனா, ரஷியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ரஷியாவில் உள்ள ஜெயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வருகிற ஜூலை 22 மற்றும் 23-ந் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது உலக அளவில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனோ தாக்குதல் காரணமாக இந்த மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் உறுப்பு நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த மாநாட்டை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்