Image Courtesy: PTI 
உலக செய்திகள்

நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் நியமனம்

நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் பங்கு அளித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அரசின் பல்வேறு அதிகாரமிக்க பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார். அவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் (வயது 50) ஆவார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 2 பிள்ளைகளுக்கு தாயான துகல், அனுபவம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர், பெண்கள் உரிமைகளுக்கான வக்கீல் மற்றும் மனித உரிமை ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர். இவர் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்