Image Courtesy: AFP 
உலக செய்திகள்

நெதர்லாந்து சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெதர்லாந்து சென்றடைந்தார்.

ஆம்ஸ்டர்டாம்,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பாவின் துர்க்மேனிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். துர்க்மேனிஸ்தான் பயணத்தை முடித்து கொண்ட அவர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அவருக்கு நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் அரச முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

1988-ம் ஆண்டு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பயணம் செய்த பின்னர் 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்திய ஜனாதிபதி மீண்டும் நெதர்லாந்து சென்றுள்ளார்.