உலக செய்திகள்

உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர “எங்களுக்கு வேறு வழியில்லை” ..! - ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைன் மீது படையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மாஸ்கோ,

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளது. முன்னதாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்தது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்ததத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர, ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வணிக பிரதிநிதிகளுடனான தொலைக்காட்சி சந்திப்பின் போது பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைனை ஆக்கிரமிப்பதைத் தவிர ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்று புதின் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு