ஏடன்,
தெற்கு ஏமன் நாட்டின் அபியான் மாகாணத்தில் உள்ள அல்-மஹ்ஃபத் ராணுவ தளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஏமனைச் சேர்ந்த அல்-கொய்தா அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று ஏடனில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். முதலாவதாக அங்குள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 காவலர்கள் கொல்லப்பட்டனர். அடுத்தாக ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் எவுகணை தாக்குதல் நிகழ்த்தினர்.இதில் புதிதாக பணியில் சேர இருந்த இளம் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.