உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினத்தந்தி

லண்டன்

இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் 96 வயதான ராணியுடன் உள்ளனர்.

இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

ராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டார்.

இதுகுறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் டுவிட்டரில்

இந்த மதிய உணவு நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் மூழுகி உள்ளது என கூறி உள்ளார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்