உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவ, வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றனர்.

பேச்சுவார்த்தை முடிந்தநிலையில், அவர்கள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினர். வெள்ளை மாளிகையில் நடந்த இச்சந்திப்பு, 30 நிமிட நேரம் நீடித்தது.

பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து டிரம்ப் ஆர்வம் தெரிவித்தார். ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். வர்த்தகம் பற்றியும் சுருக்கமாக பேசினோம் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து