உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட நிலையில், ஜோ பைடன் 130 இந்தியர்களுக்கு வாய்ப்பளித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இது தவிர அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 4 இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கும் வேளையில், 35-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாகாண சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதேபோல் 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு