உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .

லண்டன்,

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று மற்றும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா, இங்கிலாந்தில் அதிக அளவில் பதிவாகி வருகிறது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது..

இதனால் அந்நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில கட்டுப்பாடுகளை அறிவித்தார்.இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .

மேலும் வீட்டில் இருந்து பனி புரிந்தவர்கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.