கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,829 பேருக்கு தொற்று

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 61,78,632 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 57 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 57 லட்சத்து 17 ஆயிரத்து 788 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 3,48,851 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு