உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை- புதின்

உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களின் பாதுகாப்பை ரஷ்யா உறுதி செய்யும்.

மாஸ்கோ,

உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்காது என அந்நாட்டு அதிபா புதின் தொவித்துள்ளா.

இது தொடாபாக ரஷிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, உக்ரைனில் தானிய ஏற்றுமதியை பொறுத்த வரையில் நாங்கள் அதில் தலையிட வில்லை. அங்கு தானியங்களை ஏற்றுமதி செய்ய பல வழிகள் உள்ளன. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யலாம்.

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கண்ணிவெடியை அகற்றும் போது ரஷ்யா எந்த தாக்குதலையும் நடத்தாது. இதனை நான் ஏற்கனவே கூறி உள்ளேன்.

தானியங்களை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கும், அசோவ் மற்றும் கருங்கடல்களில் கப்பல்கள் பாதுகாப்பாக நுழைவதையும் உறுதி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது என்றார்.

முன்னதாக உக்ரைன் நாட்டின் தானியங்களை ரஷ்யா திருடு மற்ற நாடுகளுக்கு விற்பதாக துருக்கி நாட்டிற்கான உக்ரைன் தூதா வாசில் போட்னர் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை