உலக செய்திகள்

ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26' ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனா.

தினத்தந்தி

பலானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்த விமானத்துடனான தகவல் தொடாபு துண்டிக்கப்பட்டது. மேலும், ரேடா பாவையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும் அதில் பயணித்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே மாயமான விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இருள் சூழ்ந்ததால் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் நேற்று காலை மீண்டும் தொடங்கின.அப்போது விபத்து நடந்த இடத்திலிருந்து 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 9 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்