உலக செய்திகள்

இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவிற்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்.

தினத்தந்தி

மாஸ்கோ,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றுள்ளார். இந்தநிலையில், ரஷிய அதிபர் புதினை நெரில் சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை உறுதி செய்யும் விதமாக, ரஷிய அதிபர் புதின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படுகின்றன என்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா இந்தியாவுக்கு வரி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் புதின் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. அஜித் தோவலின் பயணத்தை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு