உலக செய்திகள்

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்பு

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

வங்காளதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 30ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அவாமி லீக் கட்சி, தேர்தல் நடந்த 299 இடங்களில் 288 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு ஜனாதிபதி எம்.அப்துல் ஹமீது பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 46 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 20 பேர் புதுமுகங்கள் ஆவர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை