கேப் டவுன்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இந்நாட்டில் பல்வேறு சட்டவிரோத கனிமவள சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத சுரங்களை நடத்தும் குழுக்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேபோல், பல்வேறு போதைப்பொருள் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் ஜோகனர்ஸ்பெர்க் நகரின் கிலேவ்லெண்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன் தினம் இரவு துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது.
சட்டவிரோத சுரங்களை நடத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த இந்த மோதலில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சுடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.