உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனம் உலகில் உள்ள 30 சதவீதம் இணையத்தளங்களை அனுமதியின்றி வேவு பார்க்கிறது ஆய்வு தகவல்

பேஸ்புக் நிறுவனம் உலகில் உள்ள 30 சதவீதம் இணையத்தளங்களை அனுமதியின்றி வேவு பார்ப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. #DeleteFacebook

தினத்தந்தி

பெர்லின்

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் பேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களைப் பற்றியும் அவற்றைப் பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி அவர்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது

பேஸ்புக்கில் தகவல் திருட்டு நடைபெற்றதால் அதற்கு எதிராக #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ள நிலையில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியகியுள்ளது.

நாம் பேஸ்புக் அக்கவுண்ட்டை வேண்டாம் என டெலிட் செய்தாலும் அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் விஷயத்தை அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

முக்கியமான தகவலாக பெரும்பான்மை பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இன்டர்நெட் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடுகின்றன என்பதை அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை