உலக செய்திகள்

உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நன்றாக செயல்படும் - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது என நிபுணர்கள் கூறியுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மாஸ்கோ,

இந்தியாவில் கேவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததாகும். கடந்த ஆண்டின் 2-ம் பாதியில் இருந்து, ரஷ்ய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது, உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே இது இந்திய-ரஷ்ய தடுப்பூசியாகும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில், அடுத்த ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே தவணையில் செலுத்தும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்