உலக செய்திகள்

சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6,300 கோடியாக உயர்வு

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தைல் பணியில் சேர்ந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்​கா​வின் ஆல்​பபெட் குழுமத்தின் துணை நிறு​வனமான கூகுள். இந்​நிறு​வனத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த சுந்​தர் பிச்சை கடந்த 2004-ல் பணியில் சேர்ந்​தார். குரோம் மற்​றும் ஆன்ட்​ராய்ட் உரு​வாக்​கத்​தில் இவர் முக்​கிய பங்​காற்​றி​னார். இதையடுத்து கடந்த 2015-ல் கூகுள் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) ஆனார்.

இவர் சிஇஓ ஆனதிலிருந்து கூகுள் நிறு​வனத்​தின் சந்தை மதிப்பு 535 பில்​லியன் டாலரில் இருந்து 3.6 டிரில்​லிய​னாக கிடுகிடுவென உயர்ந்​தது.

இந்​நிலை​யில், சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு 692 மில்​லியன் டால​ராக (ரூ.6,300 கோடி) கூகுள் நிறு​வனம் உயர்த்​தி​யுள்​ளது.

இதன் மூலம் உலகிலேயே அதிக சம்​பளம் வாங்​கும் சிஇஓ என்ற பெரு​மையை சுந்​தர் பிச்சை பெற்​றுள்​ளார். மைக்​ரோ​சாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா 96.5 மில்​லியன் டாலர் சம்​பளம் பெறுகிறார். ஆப்​பிள் நிறுவன சிஇஓ டிம் குக்​ சம்​பளம் 74.3 மில்​லியன் டாலர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.