உலக செய்திகள்

பெல்ஜியம் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்

ரயில் நிலையத்தில் சிறிய வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினத்தந்தி

பிரஸ்ஸெல்ஸ்

தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல் நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர்.

அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததாக தெரிகிறது. முன்னதாக 30 - 35 வயது இளைஞர் ஒருவர் அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டவாறு தனது பயணபெட்டியிலிருந்து எதையோ வெடிக்கச் செய்ய முயன்றதாக கூறப்பட்டது.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் விமான நிலைய சுரங்கப்பாதையில் தற்கொலைப் படையின் தாக்குதலில் 32 பேர் இறந்த நிகழ்விலிருந்து பெல்ஜியத்தில் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை அமலில் இருந்து வருகிறது. லண்டன், பாரிஸ் அடுத்து பிரஸ்ஸெல்ஸ்சில் தாக்குதல் நடந்திருக்கிறது.

பாரிஸ் தாக்குதல்

பாரிஸ் தாக்குதல் நடத்தியவர் ஐ எஸ் இயக்கத்திற்கு தனது ஆதரவை உறுதியளித்ததாக தெரிகிறது. தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது ஆதரவை தெரிவித்திருந்ததாகவும், அவர் ஏற்கனவே காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை