உலக செய்திகள்

அறிகுறியுடன் கூடிய கொரோனா பாதிப்பு; ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79 சதவீத திறன் வாய்ந்தது

அறிகுறியுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என 3வது கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.

வாஷிங்டன்,

இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தின் உதவியுடன் இந்த தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது.

இதனையடுத்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன. ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.

இதனால், நார்வே மற்றும் அயர்லாந்து அரசுகளும் அடுத்தடுத்து இதற்கு தற்காலிக தடை விதித்தன. இந்நிலையில், ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நெதர்லாந்து அரசும் நிறுத்தி வைத்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை ஆகியவற்றை முன்னிட்டு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்கும்படி டச்சு மருத்துவ வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, மார்ச் 28ந்தேதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்து கட்டு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. தடுப்பூசி போடுவது தொடர வேண்டும் என்பது முக்கியம். அதனாலேயே நாம் உயிர்களை காக்க முடியும். அந்த வைரசால் ஏற்பட கூடிய கடுமையான வியாதியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தது.

இதனை ஐரோப்பிய மருத்துவ கழகமும் கேட்டு கொண்டுள்ளது. ஆனால், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்தன. இதனால், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகள் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்தன.

இதன்பின்னர் ஐரோப்பிய மருத்துவ கழகம் அவசர ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் திறன் வாய்ந்தது என கடந்த வியாழ கிழமை தெரிவித்தது. இவற்றால் ரத்த கட்டுகள் அதிகரிப்புக்கான ஆபத்து இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அந்நிறுவனம் 32 ஆயிரம் பேரிடம் 3வது கட்ட பரிசோதனை மேற்கொண்டது. இதன் முடிவில், இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்து கொண்ட 21,583 பேரிடம் திராம்போசிஸ் எனப்படும் ரத்த கட்டுகள் ஏற்படுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.

இந்த பரிசோதனை அமெரிக்கா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவற்றில் அனைத்து வயதினரும் பங்கேற்றனர். அவர்களில் 4 வார இடைவெளியில் 2 டோஸ்கள் அல்லது ஒரு டோஸ் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என சி.என்.என். தெரிவித்து உள்ளது.

இதனால், அறிகுறியுடன் கூடிய கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆஸ்டிரா ஜெனிகா 79 சதவீத திறன் வாய்ந்தது என வெளிப்படுத்தி உள்ளது. கடுமையான வியாதி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் 100 சதவீத திறன் வாய்ந்தது என்றும் பரிசோதனை முடிவில் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்