உலக செய்திகள்

பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 6 துணை ராணுவ படையினர் பலி

பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் லால் கட்டாய் என்ற மலை பிரதேசத்தில் பாதுகாப்பு சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் துணை ராணுவ படையினர் 6 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், துணை ராணுவத்தினரின் தாக்குதலில் எங்களது இயக்கத்தினர் பலர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்