உலக செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மார்ச் 4 வரை சிறையில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மார்ச் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் இலங்கை மயலிட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் அவர்களின் படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்