உலக செய்திகள்

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; 36 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்

மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

ஹானலூலூ,

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது.

இந்த தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில், 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த தீவில் உள்ள ஒரே நகரையும் தீ சூழ்ந்துவிட்டதால், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஏராளமான மக்கள் கடலில் குதித்து மாயமானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை 'பெரும் பேரிடர்' என அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடனடியாக அங்கு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஹவாய் தீவில் தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க கடற்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்