உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - 7 பெண்கள் உள்பட 22 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 22 பேர் பலியாகினர்.

தினத்தந்தி


* சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

* ஆப்பிரிக்க நாடான காங்கோவின் நோர்ட் கிவு மாகாணம் பெனி நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 22 பேர் பலியாகினர்.

* ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் காஸ்டான்டினோ சிவேங்காவின் மனைவி மேரி முபைவா மீது லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு போலீசார் மேரி முபைவாவை நேற்று கைது செய்தனர்.

* ஈராக்கின் தியாலா மாகாணம் அல் மக்டாதியா நகரில் உள்ள ராணுவ தளம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவவீரர்கள் 6 பேர் பலியாகினர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்