உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பலி

பாகிஸ்தானில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள வான்டா புத் பகுதியில், போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட டெக்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஹீம் மும்தாஜ்கான் மர்வத் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேற்சொன்ன சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT