உலக செய்திகள்

இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது.

தினத்தந்தி

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு பல்வேறு நகரங்களில் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று புதிதாக 83 பேருக்கு வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை 19 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 300 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்