உலக செய்திகள்

அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6¼ லட்சத்தை கடந்தது

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 542 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இதன் முடிவுகளில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 47 ஆயிரத்து 182 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரு நாளில் 1,506 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,849 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 997 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் மொத்தம் 6 கோடியே 20 லட்சம்

கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்