உலக செய்திகள்

டெல்டாவை விட ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் - ஆய்வு முடிவு

டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்று இங்கிலாந்தில் நடந்த 2 ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி

லண்டன்,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவக்கூடியது என தகவல்கள் வெளியாகின. இந்த வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது.

இந்த தருணத்தில் ஒமைக்ரான் வைரஸ் பற்றி உலகமெங்கும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் 2 ஆய்வுகள் நடந்துள்ளன.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள்:-

* ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோர் ஆஸ்பத்திரியில் ஒரு இரவோ அல்லது அதற்கு அதிகமாகவோ தங்க வேண்டியது வருவது, டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளது.

* ஏற்கனவே கொரோனா தொற்று வந்து மீண்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்தியிரில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

* டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் வாய்ப்பு குறைவு என்பதற்கு எங்கள் ஆய்வு சான்றாக அமைகிறது என்கிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் நீல் பெர்குசன்.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒமைக்ரான் பற்றி ஆராய்ந்து உள்ளனர். இந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மூன்றில் இரு பங்கு குறைவுதான் என்பதாகும்.

ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் வெளியாகி உள்ள தரவுகள், இந்த வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு என காட்டுகின்றன.

மேலும் டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் நோய் தீவிரம் ஆவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு என்றும் காட்டுகின்றன. எனவே டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்ற கருத்து வலுத்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு