உலக செய்திகள்

சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றியது. இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று பரவி இருக்கிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. ஏற்கனவே இந்த தொற்று பாதிப்புக்கு ஆளான குழந்தைகள், 6 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச்சுக்குள் தொடங்கி விடும் என தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை