உலக செய்திகள்

எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பலி

விபத்தில் 39 பேர் படுகாயமடைந்தனர்.

தினத்தந்தி

கெய்ரோ,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க நேற்று பஸ்சில் வெளிநாட்டினர் சென்றனர். அந்த பஸ்சில் 27 ரஷியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இந்நிலையில், ஹர்ஹடா - கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சுற்றுலா பஸ் மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் விபத்தில் எகிப்தை சேர்ந்த பஸ் டிரைவர், ரஷிய சுற்றுலா பயணி என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து