உலக செய்திகள்

பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்; டிரம்பின் ஆலோசகர் பேட்டி

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் மற்றும் மருமகனான குஷ்னெர் பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் என கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜெருசலேம்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னெர். இவர் டிரம்பின் மூத்த ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பாலஸ்தீனிய நாட்டில் இருந்து வெளிவரும் அல் குட்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு குஷ்னெர் பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியின் தலைப்பு, அதிபர் அப்பாஸ் விரும்பினால் அவருடன் இணைந்து பணியாற்ற நான் தயார் என உள்ளது. அவரது பேட்டி அரபு மொழியில் வெளியாகி உள்ளது.

அவர் பாலஸ்தீனிய மக்களுக்கு விடுத்துள்ள நேரடியான செய்தியில், பிரகாசம் நிறைந்த எதிர்காலம் அமைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகிய இரு நாட்டு மக்களும் தங்களது தலைமையை வலிமைப்படுத்தும் நேரமிது.

ஒரு தீர்வை நோக்கிய விசயத்தில் கவனம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரமிது. இந்த முயற்சிக்கு அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு