உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

சிங்கப்பூர்,

உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அணு ஆயுத சோதனை நடத்தி தனி ஆவர்த்தனம் நடத்திய வடகொரியா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வடகொரியா, அதன்பிறகு, கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்ட அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டியது.

இதையடுத்து, சில முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறுவது உறுதியானது. இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், திடீர் திருப்பமாக சந்திப்பை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஆனாலும், வடகொரியா கேட்டுக்கொண்டதையடுத்து, மீண்டும் சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஆயத்தமாகினர்.

இதையடுத்து, திட்டமிட்ட படி இன்று (ஜூன் 12) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. சந்திப்பின் போது , அனைத்து தடைகளும் கலைந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்று கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு