உலக செய்திகள்

சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து படைகளையும் வாபஸ் பெற டிரம்ப் உத்தரவு

சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் வாபஸ் பெறுவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அதிபராக நீடித்து வரும் டிரம்ப் பல முடிவுகளை எடுத்து வருகிறார்.

இதன்படி, வருகிற 2021ம் ஆண்டு தொடக்கத்தில் சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் வாபஸ் பெற்று கொள்ளும்படி, அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்க படை தலைவர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையில் மாற்றமில்லை. நம்முடைய சொந்த நிலத்தில் அச்சுறுத்தலாக இருக்கும், வன்முறை ஏற்படுத்த கூடிய பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து நாம் செயலிழக்க செய்வோம் என்றும் இதுபற்றி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சொந்த நிலத்திற்கு அச்சுறுத்தலுக்கான அடையாளங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இருப்பது தெரியவருமெனில், சோமாலியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தகுதியை அமெரிக்கா திரும்ப பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு