உலக செய்திகள்

வளைகுடா பயணம் பயனுள்ளதாக இருந்தது - எர்டோகன்

கத்தார் விவகாரத்தை முன்னிட்டு தான் மேற்கொண்ட வளைகுடா பயணம் பயனுள்ளதாக இருந்தது என்றார் துருக்கி அதிபர் எர்டோகன்.

தினத்தந்தி

அங்காரா

கடந்த இரு தினங்களாக தான் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றாமல் உடனடியாக மோதலை முடிவிற்கு கொண்டு வரும் தீர்வுகள் ஏதும் கிட்டவில்லை என்றார் அவர்.

தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இப்பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் பயனுள்ளதாக இருந்தன; முன்பை விட அதிக முனைப்புடன் இப்பிரதேசத்தின் அமைதிக்கும், நிலைப்புத்தன்மைக்குமான நமது முயற்சிகளை தொடர்ந்து செய்வோம் என்றார் அவர்.

பயணத்திற்கான பலன்களை அறிய சிறிது காலமாகும். ஆனால் அதிகாரி ஒருவர் இப்பிரச்சினைத் தீர்வதற்கு சவூதி அரேபியாவின் பங்களிப்பு அவசியம் என்றார்.

ஒரு சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் நாம் காண முடிகிறது. வருகின்ற நாட்களில் மேலும் சில உறுதியான முன்னேற்றங்களை நாம் காண இயலும் என்றும் அந்த பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்