உலக செய்திகள்

உகாண்டா: படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி

உகாண்டா நாட்டில் உல்லாசப் படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

கம்பாலா,

கிழக்காப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் உள்ள விக்டோரியா ஏரி சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள இந்த விக்டோரியா ஏரியில் சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால், அந்தப் படகு நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் செய்வதறியாது தத்தளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டனர். ஆனால் பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 30 உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு