கோப்புப்படம் 
உலக செய்திகள்

ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை

உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாட்டு ராணுவமும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளது. இதனால் இருநாடுகளுமே போர் முனையில் சண்டையிடுவதற்கு கட்டாய ராணுவ சேவை மூலம் ஆட்களை சேர்த்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "ராணுவ சேவைக்கு தகுதியுடைய 18 முதல் 60 வயதுடைய ஆண் உக்ரைனியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட்டுகளை பெற முடியாது. மே 18-ந் தேதி வரை செல்லுபடியாகும் புதிய விதிகள், ராணுவ சட்டத்தின் போது உக்ரைன் எல்லையை கடக்க அனுமதிக்கப்படும் உக்ரைனிய ஆண்களுக்கு பொருந்தாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து