உலக செய்திகள்

உக்ரைன் வெளியுறவு மந்திரி ராஜினாமா

உக்ரைனில் முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கீவ்,

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே. அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில் நாட்டின் மந்திரி சபையில் புதிய மாற்றம் தேவை என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அண்மையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் முக்கிய தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர்.

இந்தநிலையில் நாட்டின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வந்த டிமிட்ரோ குலேபா தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். போர் பதற்றத்துக்கு நடுவே உக்ரைன் நாடளுமன்ற சபாநாயகர் ரூஸ்லென் ஸ்டீபன்சுக்கிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்துவிட்டு டிமிட்ரோ குலேபா பதவி விலகியுள்ளார். ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்