வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் அதே வேளையில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
அந்த வகையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கொரோனா தடுப்பூசி பெற்று கொண்டதை நினைத்து நான் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். வாய்ப்புகளை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். தடுப்பூசி எல்லா இடங்களிலும் எல்லாருக்கும் கிடைக்குறதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.