உலக செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணைய தலைவர் கடும் கண்டனம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்ளிட்ட 40 வீரர்கள் பலியனார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்த தாக்குதலுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைய தலவர் மிச்செல் பச்லெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநா மனித உரிமை ஆணைய தலைவரின் செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கோல்வில்லே ஜெனீவாவில் கூறும் போது, ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார் என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...