உலக செய்திகள்

மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மேலும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் பல மாதங்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மியான்மருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங் சான் சூகி உள்பட ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் நாடு மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. அதேசமயம் மியான்மருக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா மற்றும் ரஷியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு