உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தப்பட்டார்.

தினத்தந்தி

காபூல்,

அமெரிக்க அரசு மற்றும் தலீபான்கள் பிரதிநிதிகள் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையின் பலனாக ஆப்கானிஸ்தானில் தற்காலிக சண்டை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

இந்த சண்டை நிறுத்தம் 7 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவுகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் சமான்கன் மாகாணத்தில் உள்ள டரா இ சுப் பாலா மாவட்டத்தின் கவர்னரை ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.

எனினும் இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு