உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் துப்பாக்கி முனையில் கவர்னர் கடத்தப்பட்டார்.

காபூல்,

அமெரிக்க அரசு மற்றும் தலீபான்கள் பிரதிநிதிகள் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையின் பலனாக ஆப்கானிஸ்தானில் தற்காலிக சண்டை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

இந்த சண்டை நிறுத்தம் 7 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவுகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் சமான்கன் மாகாணத்தில் உள்ள டரா இ சுப் பாலா மாவட்டத்தின் கவர்னரை ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.

எனினும் இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

SCROLL FOR NEXT