உலக செய்திகள்

நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்

அமெரிக்காவில் அரசின் செலவின நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் (ஷட் டவுன்) நிகழ்ந்துள்ளது. நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. எனினும், சனிக்கிழமை பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம், நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ''நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் நிர்வாக முடக்கம் 4-வது முறையாக ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்