உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது; ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர்பாக, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற 5 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

தினத்தந்தி

அதேபோல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த சூழலில் ஈரான் அதிபர் தேர்தலையொட்டி கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்டு மாதம் பதவியேற்ற பின்னரே, நிறுத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என ஈரான் அண்மையில் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ஈரானின் இந்த அறிவிப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மீண்டும் திரும்புவதற்கான முட்டுக்கட்டைக்கான காரணத்தை திசை திருப்பும் ஒரு மூர்க்கத்தனமான முயற்சி. இதன் மூலம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. ஈரான் ஒரு மனிதாபிமான சைகை செய்வதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த நாடு அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்கும் என கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்